Monthly Archives: April 2012
Category Archives:
யாழ். மேதின கூட்டத்தில் தமிழ் மக்கள் அணிதிரள வேண்டும்: மனோ அழைப்பு
அரசின் மேலாதிக்கத்திற்கு எதிரான ஜனநாயக போராட்டங்கள் தமிழ் மாகாணங்களில் வெகுவிரைவில் முன்னெடுக்கப்பட வேண்டும்.
அத்தகைய ஜனநாயக அரசியல் போராட்டங்களுக்கு பிள்ளையார் சுழி போடுவதாக எமது பொது எதிர்கட்சிகளின் மேதின கூட்டம் யாழ்ப்பாணத்தில் அமைய வேண்டும். என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ ...
சிவாஜிலிங்கத்தின் நடவடிக்கைக்கு டெலோ கண்டனம்
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் 35ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் நடந்து கொண்ட முறை குறித்து தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து டெலோவின் தலைவரும், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட ...
அடக்குமுறைகள் நிலைத்ததாக உலகெங்கிலும் வரலாறில்லை”
“அடக்குமுறைகள் நிலைத்ததாக உலகெங்கிலும் வரலாறில்லை”
“உரிமைப்போர்கள் தோற்றதாக உலகம் இதுவரை கேட்டதில்லை”
அமெரிக்காவின் சிகாகோ நகரில் எட்டுமணிநேர வேலையை வலியுறுத்தி தமது உடல் ஆரோக்கியத்திற்காகவும் தமது குடும்பப் பொறுப்புக்களை நிறைவேற்றுதவற்காகவும் உழைக்கும் வர்க்கம் அன்று வீதிகளில் இறங்கி போராடினர். ஆளும் வர்க்கம் அன்று அவர்கள்மீது ...
களுவாஞ்சிகுடி பொலிசாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட மருத்துவமுகாமும்
களுவாஞ்சிகுடி பொலிசாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவை 28.04.2012 காலை தொடக்கம் பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. களுவாஞ்சிகுடி வைத்தியசாலை, வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை இணைந்து நடாத்திய மருத்துவமுகாமும் இடம்பெற்றது. இந் நிகழ்வில் களுவாஞ்சிகுடி உதவிப் பொலிஸ் ...
விநாயகர் கோவிலை அகற்றும் உத்தரவுக்கு இந்து மா மன்றம் கண்டனம்
திருகோணமலை பொது வைத்தியசாலை விநாயகர் கோவிலை அகற்றுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கு அகில இலங்கை இந்து மா மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அகில இலங்கை இந்து மாமன்றம் விடுத்துள்ள அறிக்கையில், நேற்றைய தினசரியொன்றில் வெளியான திருமலை வைத்தியசாலை விநாயகர் கோவிலை ...
தந்தை செல்வாவின் பாதையிலேயே பயணித்துக் கொண்டிருக்கின்றோம்-இரா.சம்பந்தன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்கா, இந்தியா மற்றும் நாடுகளுக்கு சென்றாலும் இனப்பிரச்சினைக்கான தீர்வு காண்பதற்கு எம்மிடம் தான் வரவேண்டும் என்று அரசாங்க அமைச்சர்கள் இப்போது கூறத்தொடங்கியுள்ளனர். அன்று தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் 1957 மற்றும் 1965ஆம் ஆண்டுகளில் இருந்த ...
சுஷ்மா ஸ்வராஜ் இலங்கை விஜயம் குறித்து இந்தியப் பிரதமருக்கு விளக்கம்
இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களின் 12பேர் கொண்ட குழு, கடந்தவாரம் இலங்கையில் மேற்கொண்ட பயணம் குறித்து, அந்தக் குழுவுக்குத் தலைமை வகித்த சுஷ்மா ஸ்வராஜ், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் விளக்கியுள்ளார். இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு, எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் ...
தனி ஈழம் அமைக்க மத்திய அரசு உதவவேண்டும்-மு.கருணாநிதி
இலங்கை தமிழர்களுக்காக தனி ஈழம் அமைக்க மத்திய அரசு உதவி செய்ய வேண்டும் என தி.மு.க., தலைவர் கருணாநிதி மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். தனி ஈழம் தவிர இலங்கை தமிழ் மக்கள் வேறு எதனையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ...
அரசு இனவாத அரக்கனைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது-மனோ கணேசன்
இன்றைய அரசாங்கம், இனவாத அரக்கனை அவிழ்த்துவிட்டுள்ளது. இந்த அராஜக அரக்கன், தமிழ் இந்துக்களை அல்லது தமிழ் கிறிஸ்தவர்களை மாத்திரமே குறி வைத்துள்ளது என்ற மூட நம்பிக்கையை முஸ்லிம் மக்கள் கைவிட வேண்டும். இந்நாட்டில் இனவாதம் தமிழ் மக்களை மாத்திரம் குறி வைக்கவில்லை. ...
பிள்ளையார் கோயிலை அகற்ற உத்தரவு திருமலைத் தமிழர்கள் கொந்தளிப்பு!
தம்புள்ளைப் பள்ளிவாசல் பிக்குகளால் சேதமாக்கப்பட்ட விவகாரத்தையடுத்து சிறுபான்மையின மக்கள் மத்தியில் எழுந்துள்ள கொதிப்பு தணியும் முன்னரே கிழக்கில் திருகோணமலையில் 60 வருடகால பழைமை வாய்ந்த விநாயகர் ஆலயத்தையும் அகற்றுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை பொதுவைத்தியசாலை வளாகத்தினுள் அமைந்துள்ள இந்தப் பிள்ளையார் ஆலயத்தின் கும்பாபிஷேகம் ...